×

ஆந்திர மாநிலத்தில் பெண் இணை கலெக்டர், பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி காதல் திருமணம்: ஆடம்பரமின்றி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

திருமலை: ஆந்திர மாநிலத்தில் பெண் இணை கலெக்டர், பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ஆடம்பரமின்றி கலெக்டர் அலுவலகத்திலேயே நடந்தது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டிணம் இணை கலெக்டராக பணிபுரிபவர் அபராஜிதா சிங் சின்வார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். உத்தர பிரதேச மாநிலம் கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திர குமார். அபராஜிதா சிங் சின்வாரும், தேவேந்திர குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் மச்சிலிப்பட்டணம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பதிவாளர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.தொடர்ந்து, திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் குட்லவல்லேறு மண்டலம், வேமாவரத்தில் உள்ள கொண்டலம்மா கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

The post ஆந்திர மாநிலத்தில் பெண் இணை கலெக்டர், பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி காதல் திருமணம்: ஆடம்பரமின்றி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Andhra state ,Kadhal ,
× RELATED கட்டுமான பணிகள் நடைபெறும் வீட்டில்...